Thursday, 14 April 2011

இது தான் காதலா?


இது தான் காதலா?

தனிமையில் சிரிப்பு கனிந்து தான் கதைப்பு
பனியிலும் நடப்பு இனிமையாய் இருப்பு  
இனிப்பு புளிக்கும் இன்னமும் நடக்கும் 
சனியன் என்பார் வீட்டில் சந்தோசம் என்பன்.

உண்மையில் Zero, Hero போல் வண்ணம் 
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் எண்ணம் 
கண்ணோடு காண்பதும் காதோடு கேட்பதும் 
நின்றுதான் நினைப்பதும் நினைவோடு இல்லை !

சொல்வது விளங்காது செல்லுமிடம் தெரியாது 
நில்லென்றால் நடப்பு நிற்காமல் நினைப்பு 
தில்லென்று ஒன்றில்லை திக்கெல்லாம் பறப்பு
வில்லென்று உடல் இங்கு வீரென்று மனம் எங்கோ ?

அக்கினி 
ச.நித்தியராம் 



2 comments: