Tuesday, 7 December 2010

கானல் நீர்

விடிகின்ற இரவும்
மடிகின்ற பகலும்
சந்திக்கும் வேளை

உடைகின்ற இதயம்
விடைகான முயலும்
பொன்னந்தி மாலை

வடிகின்ற அழகில்
முடிசூடா ராணி
திரிகின்ற சோலை

உலவும் மகளை
வலம் வந்து பார்த்தேன்
மலர் போலும் என்மங்கை இல்லை

ஓயும் பகலில்
பாயும் விழியில் கண்டது
தேயும் நிலவோ?

பின்தான் தெரிந்தது
அது நிலவும் இல்லை
நிலவின் நிழல் என்று!!


அக்கினி
ச. நித்தியராம்
 

1 comment: