விடிகின்ற இரவும்
மடிகின்ற பகலும்
சந்திக்கும் வேளை
உடைகின்ற இதயம்
விடைகான முயலும்
பொன்னந்தி மாலை
வடிகின்ற அழகில்
முடிசூடா ராணி
திரிகின்ற சோலை
உலவும் மகளை
வலம் வந்து பார்த்தேன்
மலர் போலும் என்மங்கை இல்லை
ஓயும் பகலில்
பாயும் விழியில் கண்டது
தேயும் நிலவோ?
பின்தான் தெரிந்தது
அது நிலவும் இல்லை
நிலவின் நிழல் என்று!!
அக்கினி
ச. நித்தியராம்
thumbs up....!!!
ReplyDelete