Saturday, 4 June 2011

காதல் வந்தால் சொல்லி அனுப்பு!!


                                                                                                                                   (available என்றால் வருகிறேன் !! )

மையோ மரகதமோ மருகடலோ மழைமுகிலோ
ஐயோ அது இருளோ அதிநிறமோ கரு விழியோ
குய்யோ முறையோ என அது விடும் அம்போ
தெய்யோ தலைவிதியோ அவள் தாளடி தஞ்சம்!

தென்றலடி நீயெனக்கு தீண்டும் தேகமடி நானுனக்கு 
மெத்தையடி நீயெனக்கு மேவும் போர்வையடி நானுனக்கு
வெல்லமடி நீயெனக்கு வழங்கும் வள்ளலடி நானுனக்கு
செல்லமடி நீயெனக்கு இன்பச்சொர்க்கமடி நானுனக்கு!!

பற்றும் என்மனம் உன் நினைவில் உலாவரும்  
சுற்றும் சுடர் விழி எங்கும் உன்முகம் கனாவரும்
முற்றும் துறந்த காதலில் கலங்கும் நிலை வரும்
சற்று முன்பு நிலவரம் எந்தன் நெஞ்சில் கலவரம் !!!

நீ தேனாவதும் நான் வண்டாவதும் நம்கையிலே  
நீ நானாவதும் நான் நீயாவதும் சிந்தையிலே
நீ விண்ணாவதும் நான் முகிலாவதும் விந்தையிலே
நான் ஆணாவதும் இல்லை வீணாவதும் உன்கையிலே!!!!


விழிமூடி நின்றாலும் உன்னுருவம் முன்னால்
துளிநேரம் விடாது உன்நினைப்பு தன்னால்
வழியேதும் இல்லை உனை மறக்க என்னால்
தெளிவாக சொன்னால் அழிந்தேனே உன்னால் !!!!!

அக்கினி 
ச.நித்தியராம் 


No comments:

Post a Comment