கண்களை மூடிக்
காணும் கனவில்
காதல் காட்சியில்நானும் நீயும்
தவறிலா உறவில்
தளிர்த்திடும் நாம்
தவறுகள் செய்வோம்
தடைகள் இல்லை
நேரிலே காண்போம்
நிஜத்திலே நிகர் நிகர்
நிற்போம் ஆனால்
நித்திரையில் தான் உரையாடல்
வண்ணக் காதலை இன்னும்
சொல்லவில்லை ஆயினும்
வசந்தக் கனவில்
வரையிலா உறவுகள்
கட்டிலில் புரண்டு
கண்களை மூடின்
இமைஓரம் உன்
இளமை உருவம்
நிஜத்திற்கும் நினைவிற்கும்
இடையில்
ஓர் கந்தர்வ ராகம்
நம் கண்களுகிடையில்
மௌன தேசத்தின்
மந்திர வார்த்தைகள் நம்
மனங்களுகிடையில்
மகிழ்ச்சிப் போராட்டம்
பொசுங்கும் கனவால்
பொறி தட்டும் நினைவில்
பொருமும் நான்
அரும்பும் புன்னகை
ஆனந்த வெள்ளத்தில்
அமைதியாய் நீ
அக்கினி
ச நித்தியராம்
மு? மூ?
ReplyDeletenice....
ReplyDeletethanks for correct the word spelling
ReplyDeleteazhagana varigal ..Keep up your good work classmate:)
ReplyDelete