வாழ்க்கைத் திரைப்படத்தில்
சந்தைக் காட்சியில்
சாலையோரம் வந்து போகும்
பாதசாரிகள் இவர்கள்
வருவதும் தெரியாது
போவதும் தெரியாது
வந்தாலும் புரியாது
இவர்கள்
காவிய நாயகர்கள்
அல்லவே
கடன் தீர்க்க வந்திருக்கும்
கலிகாலப் பிறவிகள்
இவருள் எழும்
தனி மனித உணர்ச்சிகள்
வித்தியாச கற்பனைகள்
விபரீத எண்ணங்கள்
விளக்க முடியாத செயல்கள்
குறுகிய வட்டத்தில்
குறுந் திரைப்படமாய்
அதில் அவர்கள் நாயகர்கள்
இருந்தாலும்
ஓரங்க உலக நடக்க மேடையில்
ஒட்டாமல் ஒதுங்கியே இருக்கும்
உதவாததகிவிடும்
உறவுக்கதைகள்
சேரவும் மாட்டாது
சேந்தாலும் தெரியாது
மழுங்கடிக்கும் திறமைகள்
மறந்து விடும் சாதனைகள்
இவர்கள்
இலைக்குள் மறைந்திருக்கும்
காய்கள் இல்லை
மறைத்து வைத்திருக்கும் மாயம்
ஒன்றல்ல இரண்டல்ல
ஓராயிரம் திறமைகள்
ஓரங்கட்டி
ஒதுங்கி பதுங்கி
வாழுது அங்கே
வறுமையும் வாட்டுது
விதியோடு விளையாடும் இந்த
வீதியோர வித்தகர்கள்
விலைமதிப்பட்ட
விரியங்கள்
புதைந்து கிடக்கும்
தத்துவச் செம்மணிகள்
தனி நிகர் மாந்தர்கள்
தான் தோன்றிய தரணியின்
மைந்தர்கள்
விதைக்க நிலமில்லாது
வீதிஓரம் எறிந்துவிட்ட
வித்துக்கள்
பிரம்மன் படைப்பின்
கவலைஈனங்கள்.
அக்கினி
ச.நித்தியராம்
அக்கினி
ச.நித்தியராம்
a genuine thought of the unrealized & uncared street angels
ReplyDelete'amp'stands for..!?
ReplyDelete